ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
ஹிந்தித் திரையுலகத்தைப் போலவே தமிழ்த் திரையுலகத்திலும் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தயாராகி வருகின்றன. 30 வயதைக் கடந்த நாயகிகளான த்ரிஷா, நயன்தாரா இருவருமே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார்கள்.
நயன்தாரா, தனக்கு முக்கியத்துவம் உள்ள தனி நாயகியாக தமிழில் சில வருடங்களுக்கு முன்பே நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த முதல் படமான 'மாயா' படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதன் பின் அவர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகம் நடிக்கவில்லை. ஆனால், தற்போது அவர் நடித்து வரும் படங்கள் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்தான்.
அந்த வரிசையில் இந்த வாரம் 'டோரா' படம் வெளிவர உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு “அறம், கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள்” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. சிவகார்த்திகேயனுடன் 'வேலைக்காரன்' படத்திலும் நடித்து வருகிறார்.
'டோரா' படமும் 'மாயா' படம் போலவே ஒரு பேய்க் கதைதான். ஆனால், 'டோரா' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டதால் படக்குழுவினர் கவலையில் உள்ளார்கள். குழந்தைகள் வந்து படத்தைப் பார்க்க முடியாது. இதனால் குடும்பத்துடன் பெண்களும் அதிகம் வர மாட்டார்கள். அதனால், 'டோரா' படம் நயன்தாராவிற்கு 'மாயா' படம் அளவிற்கான வெற்றியைத் தருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.