விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
சாட்டை மகிமா நம்பியார் குற்றம் 23 படத்திற்கு பிறகு கோலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டதை அடுத்து இப்போது ஈட்டி டைரக்டர் ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் ஐங்கரன் மற்றும் அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ஐங்கரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட மகிமா நம்பியார், அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
ஜி.வி.பிரகாசுடன் நடித்த அனுபவத்தைப்பற்றி அவர் கூறுகையில், இதற்கு முன்பு ஜி.வி.பிரகாஷை சந்தித்தது இல்லை என்பதால், முதல்நாள் ஸ்பாட்டிற்கு சென்றபோது நர்வசாகவே இருந்தேன். காரணம், அன்றைய தினம் எங்களுக்கிடையே ரொமான்ஸ் காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர் ரவிஅரசு. நான் சென்றதும் என்னிடம் காட்சியை சொல்லி டயலாக் பேப்பரையும் கொடுத்து விட்டார். அதை நான் மனப்பாடம் செய்தபடி எப்படி நடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது, ஸ்பாட்டிற்குள் என்ட்ரி ஆனார் ஜி.வி.பிரகாஷ். வேகமாக அவர் வந்ததைப்பார்த்தபோது, அதுவரை நர்வசாக இருந்த எனக்கு சற்று பயம் ஏற்பட்டது. அப்போது டைரக்டரிடம் சீன் பற்றி கேட்டு விட்டு, என்னை நோக்கி வந்த ஜி.வி.பிரகாஷ் எனக்கு கைகொடுத்து விட்டு, இந்த காட்சியில் இந்த மாதிரி நடிப்போம் என்று ரிகர்சல் பார்த்தார். சிறிதுநேரத்தில் நீண்டகாலமாக பழகிய நண்பர் போலவே பேசிப்பழகினார். அது எனக்கு அவர் மீதிருந்த பயத்தை போக்கியது. அதனால், நான் இருவரும் இணைந்து நடித்த ஒரு வாரமும் ரொம்ப ஜாலியாக இருந்தது. அதனால் அடுத்து மீண்டும் ஜீ.வி.பிரகாசுடன் இணைந்து நடிக்கப்போகும நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் மகிமா நம்பியார்.