பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' படங்களை தரணிதரன் இயக்கி வரும் படம் 'ராஜா ரங்குஸ்தி. 'மெட்ரோ' என்ற படத்தில் நடித்த புதுமுக நடிகர் ஷிரிஷ், சாந்தினி தமிழரசன் இருவரும் ஜோடியாக நடிக்கும் படம் இது. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ஷிரிஷ். இந்த படத்தில் நடிக்கும்போது தனக்கு ஏற்பட்ட ஒரு சுவையான சம்பவம் என்று ஒரு செய்தியை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ஷிரிஷ்.
அதில் ''வட சென்னையில் உள்ள ஒரு பகுதியில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தி வரும்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே சிறிய சண்டை ஏற்பட்டது. அப்போது நான் போலீஸ் உடையில் ரோந்து வாகனத்தில் உட்கார்ந்திருந்ததால் ஒருவர் என்னிடம் வந்து, 'நீங்கள் போலீஸ் தானே, ஏன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இவர்களை கட்டுப்படுத்தக் கூடாது?' என்று கேட்டார். சில நிமிடம் என்னால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் என்னை நிஜ போலீஸ் என்று நினைத்து விட்டார்கள்! இந்த சம்பவம் என் கேரக்டருக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார் ஷிரிஷ்.