ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பயிர்கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு தண்ணீர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 13 நாட்களாக தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் விக்ரமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எங்கள் தமிழக விவசாயிகள் தற்போது தலைநகர் டில்லியில் அவர்களது வாழ்வுரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதிய பயிர்கடன் வாங்கினால் அதனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது அந்த கடன்களை தள்ளுபடி செய்வதற்கு தகுந்த வழி வகைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது அடைக்க முடியாமல் நிலுவையில் இருக்கும் அவர்களது பழைய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வழியில்லை என்று அறிவித்திருப்பது அவர்களது எதிர்காலத்தை இருட்டில் தள்ளிவிடுவது போன்ற சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
மனித இனத்திற்கு அத்யாவசியமான உணவுப்பொருட்களை பயிர் செய்யும் விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டு கடன்காரர்களாகி கடனை அடைக்க முடியாமல் அவமானத்தினால் தற்கொலை செய்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக அரசாங்கம் மக்களால்தான் அரசாங்கம் என்ற கருத்தின் அடிப்படையில் மத்திய அரசு கருணை உள்ளத்தோடு தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்து அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.