தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். இந்த ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் தமிழ் திரைப்பட பிரிவின் சார்பில் போட்டியிட்டவர்களில் ஆனந்தா பிக்சர்ஸ் அதிபர் எல்.சுரேஷ் வெற்றி பெற்றார். ஏ.சாய்பிரசாத், ஏ.கணேஷ், வி.பி.மாதவன் நாயர், ஏவிஎம்கே.சண்முகம் ஆகியோர் துணை தலைவர்களாக வெற்றி பெற்றனர்.
ஸ்டூடியோ மற்றும் தயாரிப்பு பிரிவு செயலாளராக ரவி கொட்டாரக்கராவு, விநியோகஸ்தர், தியேட்டர் பிரிவு செயலாளராக என்.ராமசாமியும் தேர்வு பெற்றனர். நடிகை குட்டிபத்மினி, கே.எஸ்.ராமகிருஷ்ணா, பி.ரவிகுமார், ஆர்.கே.வெங்கடாச்சாரி, கே.நந்தகுமார், கோபால்தாஸ், டி.எஸ்.ராம்பிரசாத், பி.அம்பிகாபதி, ஜி.ஜெயகுமார், எம்.நரசிம்மலு,
ஜி.ஸ்ரீனிவாசன், ஆர்.சத்யசீலன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்பனர். வெற்றி பெற்றவர்கள் நேற்று மாலை நடந்த பொதுக்குழுவில் பதவியேற்றுக் கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.