ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வந்தபோதே வடசென்னை படத்தற்கு கால்சீட் கொடுத்தார் தனுஷ். ஆனால் அப்போது வெற்றிமாறன் விசாரணை படத்தின் விருது சம்பந்தமாக வெளிநாட்டிற்கு இரண்டு மாதங்கள் சென்று விட்டநிலையில், தான் இயக்கயிருந்த பவர்பாண்டி படத்தை தொடங்கினார்.
அதோடு, வேலையில்லா பட்டதாரி-2 படத்திலும் நடிக்க கால்சீட் கொடுத் தார். விளைவு, என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை படங்களில் சில மாதங்களாக டீலில் விடப்பட்டன. மேலும், இந்த நேரத்தில் தனுஷ் யாருடைய மகன் என்றொரு வழக்கையும் சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இப்படி நடிப்பு, இயக்கம், வழக்கு என பல விசயங்களில் சிக்கியிருந்தபோதும், ஒருவழியாக பவர்பாண்டி படத்தை இயக்கி முடித்து ரிலீசுக்கு கொண்டு வந்து விட்டார் தனுஷ்.
இந்நிலையில், பவர்பாண்டி பற்றி தனுஷ் கூறுகையில், நம்மைச்சுற்றி நல்லது கெட்டது என எல்லா விசயங்களும் மாறி மாறி நடக்கிறது. ஆனால் என்ன நடந் தாலும் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த பவர்பாண்டி படத்தின் கதை. மேலும், என் ராசாவின் மனசில படத்தை இயக்கும் வாய்ப்பை என் தந்தைக்கு கொடுத்து அவரை ஒரு டைரக்டராக்கியவர் ராஜ்கிரண். அதனால் அவரை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கியிருக்கிறேன். என்னை அவர் மருமகன் என்றே அன்போடு அழைப்பார். சிறந்த நடிகரான அவரை வைத்து எனது முதல் படத்தை இயக்கியதை பெருமையாக நினைக்கிறேன் என்கிறார் தனுஷ்