'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாடல் காப்பி ரைட்ஸ் விசயமாக இளையராஜா எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கிடையே அதிருப்திகரமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால் இதுபற்றி அவர்கள் காலத்து பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து இப்போதுவரை எந்தவித கருத்தும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார். அவரது மகனான மதன்கார்க்கி மட்டும் இளையராஜா கருத்துக்கு வரவேற்பு கொடுத்தார். அதேசமயம், இளையராஜாவே இருந்தாலும் அவர் இசையமைத்த பாடல்களை மேடையில் பாட வேண்டுமென்றாலும் சம்பந்தப்பட்ட பாடலாசிரியர், தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றொரு கருத்தினையும் பதிவு செய்தார்.
ஆனால், இந்த நேரத்தில், கோலிவுட்டின் பிரபல பாடலாசிரியர்களிடம் இந்த காப்பி ரைட்ஸ் குறித்து கருத்து கேட்டால், அதுபற்றி நாங்கள் எதுவும் சொல்ல இயலாது. எங்களுக்கெல்லாம் சீனியர் கவிஞர் வைரமுத்துதான். அதனால் அவர் அதுகுறித்து என்ன பதில் சொல்கிறார் என்பதை பொறுத்துதான் நாங்கள் பதிலளிக்க முடியும். அவருக்காகத்தான் நாங்கள் காத்திருக்கிறோம் என்கிறார்கள். மேலும், இளையராஜாவுக்கு நெருக்கமான சில பாடலாசிரியர்களோ, இளையராஜாவுக்கு யாரும் கருத்து சொல்வது பிடிக்காது. அதுவும் இந்த மாதிரி சூழலில் சொன்னால் கோபித்துக்கொள்வார் என்று வாய் திறக்கவே பயப்படுகிறார்கள்.