ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
ரெமோ படத்தையடுத்து விஜய்யுடன் நடித்த பைரவா படம் தனக்கு தமிழில் உச்ச நடிகை அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும் என்பதுதான் கீர்த்தி சுரேஷின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த படம் அவரை ஏமாற்றி விட்டது. அதனால் தற்போது அவரது கவனம் தெலுங்கு பக்கம் திரும்பியுள்ளது. சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிப்பவர், தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறார்.
ஏற்கனவே அவர் நடித்த நீனுலோக்கல் வெற்றி பெற்றதால், இப்போது மூன்று மெகா படங்களில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதோடு சாவித்ரி வாழ்க்கை கதையில் உருவாகும் மகாநதி படத்தில் சாவித்ரியாக நடிப்பதை அடுத்து, அவரது சம்பளமும் ரூ. 3 கோடியாக உயர்ந்து நிற்கிறதாம். அதனால் தெலுங்கில் இன்னும் பெரிய இடத்தை பிடித்துவிடவேண்டும் என்று ஐதராபாத்திலேயே முகாமிட்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், சமந்தா, ராகுல்பிரீத்சிங் உள்ளிட்ட சில நடிகைகள் முதலில் தமிழில் நடித்து சரியான லிப்ட் கிடைக்காமல் தெலுங்கில் பிரபலமாகி பின்னர் தமிழுக்கு வந்தது போன்று, தானும் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிறகு இனிமேல் தமிழில் கூடுதல் கவனம் செலுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.