ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சிறுமி ஏ.பி.நேத்ரா. ஸ்பீட் கேட்டிங் எனப்படும் விளையாட்டில் சின்ன வயதிலேயே சாதனை படைத்து வருகிறார். கடந்த மாதம் கோவாவில் நடந்த சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 4 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் இரண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் வருகிற மே மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த அவரின் விருப்பம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் சங்கத்தின் முடிவு செய்தனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தான் விஜய்யின் தீவிர ரசிகை என்றும் அவரை நேரில் சந்தித்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் தாய்லாந்து போட்டியில் இன்னும் உற்சாகமாக விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார். அவரின் இந்த விருப்பத்தை ரசிகர் மன்றத்தின் மூலம் விஜய்க்கு தெரியப்படுத்தினர்.
இதனால் விஜய், நேத்திராவை சந்திக்க விரும்பினார். இதையடுத்து நேத்திரா, ஸ்கேட்டிங் சங்க நிர்வாகிகள், நேத்ராவின் பெற்றோர்கள் விஜய்யை சந்தித்தனர். தாய்லாந்து போட்டியிலும் வெற்றிபெற்றுத் திரும்ப விஜய், நேத்ராவை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.