ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மொழியைச் சேர்ந்தவர்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த ஆண்டு தமிழ் மொழி சார்பில் தலைவர் தேர்ந்தெடுக்கபட உள்ளார்.
அதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இந்த நிலையில் தேர்தலில் பல முறைகேடுகள் நடப்பதாக கூறி தமிழ் தயாரிப்பாளர் சார்பில் போட்டியிடுறவர்களில் ஒரு அணியினர் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இது தொடர்பாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரோகிணி பன்னீர் செல்வம் கூறியதாவது:
தேர்தல் அதிகாரியாக உள்ள சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டிருப்பதாலும், ப்ராக்ஸி ( றிஸிளிஙீசீ ) முறைப்படி (ஒருவர் ஓட்டை அவர் அனுமதி கடிதத்துடன் இன்னொருவர் போடுவது) ஓட்டுகள் பதிவு செய்யக் கூடாது என்று டெல்லி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில் நாங்கள் தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்ற ஆணையை பரிசீலிக்கும் படி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
ஆனால் தேர்தல் அதிகாரி இந்த உத்தரவை ஏற்க மறுக்கிறார். குறிப்பிட்ட ஒரு அணியினருக்கு அவர் ஆதரவாக செயல் படுகிறார். இதனால் எங்கள் அணிக்கு அவர் மீது நபிக்கை இல்லை. நேர்மையாகவும், நியாயமாகவும் இந்த தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்பதால் நங்கள் இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம்.
என்றார் பன்னீர் செல்வம். பேட்டியின்போது கே.ராஜன், ஜெயந்திகண்ணப்பன், உட்லாண்ட்ஸ் வெங்கடேஷன், தாயரிப்பாளர்கள் ஹென்றி, பாபுகணேஷ், எழுமலை, நந்தன், முக்தா.சுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.