‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சச்சின் ஜோஷி. உலகம் முழுவதும் ஓட்டல் நடத்துகிறார். மதுபான தொழிற்சாலை நடத்துகிறார். வாழ்நாளில் பாதி நேரம் விமானத்தில் பறக்கும் கோடீஸ்வரர். ஆனாலும் அவருக்கும் சினிமா மீது ஆர்வம். தொழில் நேரம் போக மீதி நேரங்களில் சினிமாவில் நடிப்பது அவரது பொழுதுபோக்கு. ஆரம்பத்தில் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அதன் பிறகு பாலிவுட்டுக்குச் சென்றார். அங்கு 5 படங்களில் நடித்தார். இப்போது தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டு யார் இவன் என்ற படத்தை தயாரித்து அதில் நடித்துள்ளார்.
தமிழ் தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை டி.சத்யா இயக்குகிறார். சச்சின் ஜோடியாக பாலிவுட் நடிகை இஷா குப்தா நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார், பிரபு, கிஷோர், சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளார். இது பாரா கபடி போட்டியை பின்னணியாக கொண்டு உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை. இந்தப் படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து தமிழில் படம் தயாரித்து நடிக்க இருக்கிறார் சச்சின்.