'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தமிழ்நாட்டை வழிநடத்திச் செல்ல தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் இல்லை என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லோருக்கும் பேசும் தைரியம் வந்துவிட்டது.
யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கிறார்கள், பேசுகிறார்கள். அவர் மறைவுக்குபின் தொலை நோக்குப் பார்வை கொண்ட தலைவர் யாரும் இல்லை. தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இப்போது ஆட்சியும் கேள்விக்குறியாக உள்ளது. திடீர் என்று தலைவரை திணிக்கக் கூடாது, தலைவர்கள் தானாக உருவாக வேண்டும். மகளுக்கு பணி செய்பவர்களை இனம் கண்டு மக்களே தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
இன்று இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் ஓட்டுப்போடவில்லை. அவர்களின் தலைவிக்குத்தான் மக்கள் ஓட்டுப்போட்டார்கள். நம் நாட்டு சட்டப்படி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். சட்டப்படி ஆட்சி நடத்துங்கள்.எந்த அரசாங்கம் இருந்தாலும் நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்துக்காக அவர்களை சந்தித்துப் பேசுவோம். அது எங்களின் உரிமை.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மொழி, இன, பிரச்சினையை கிளப்ப கூடாது. நடிகராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர் என்ற முறையில் போட்டியிடுகிறார். நடிகர் சங்கத்தில் அரசியல் கலப்பு இல்லாமல் செயல்படுகிறோம், அதுபோல் தயாரிப்பாளர் சங்கம் செயல்பட வேண்டும். அதற்காகத்தான் போட்டியிடுகிறோமே தவிர பதவி ஆசையால் இல்லை. இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் அந்த பேட்டியில் கூறினார்.