பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 24) வெளியான 'கடுகு' திரைப்படம் 169 திரையரங்குகளில் ரசிகர்களின் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. 'கடுகு' திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார், படம் முடிந்தவுடன் நேராக படத்தின் இயக்குனர் விஜய்மில்டன் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார். அதுபற்றி இயக்குனர் விஜய்மில்டனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :
என் அப்பா பெயர் விஜய்ராஜ். அவர் தமிழில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். சில காரணங்களால் அப்படங்கள் வெளிவராமல் போனது. காதல் படம் பார்த்துவிட்டு நடிகர் சிவகுமார் சார் என் வீட்டிற்கு போன் செய்திருந்தார். அப்போது என் அப்பா போனை எடுத்து பேசியுள்ளார். இருவருக்கும் சினிமாவில் அறிமுகம் என்பதால், என்னைப்பற்றி நிறைய என் அப்பாவிடம் பாராட்டி பேசியுள்ளார் சிவகுமார் சார்.
அதேபோல் சிவகுமார் சார் பல மேடைகளில் மகாபாரதத்தைப்பற்றி பேசி வருகிறார். என் அப்பா கர்ணனைப்பற்றி 'கர்ணன்' எனும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். பூம்புகார் பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தை படித்த சிவகுமார் சார் என் அப்பாவை அவர் வீட்டுக்கு அழைத்து நிறைய சிலாகித்து பேசியுள்ளார். 'கடுகு' படத்தின் பிரிவியூ காட்சிக்கு சிவகுமார் சாரை அழைத்தபோது, அவர் நான் தியேட்டரில் போய் பார்த்து கொள்கிறேன் என்றார். நேற்று என் அப்பாவை வீட்டிற்கு வந்து அழைத்து சென்ற சிவகுமார் சார் 'கடுகு' படத்தை பார்த்துள்ளார். படம் முடிந்து நேராக என் வீட்டிற்கு வந்தவர் படம் பற்றி நிறைய பாராட்டி பேசினார். என் மனைவி, குழந்தைகளுடன் உரையாடினார். 'கடுகு' மிகச் சிறந்தப் படம் என்றும், குறிப்பாக இயக்குனர் ராஜகுமாரனின் நடிப்பு பிரமாதம் என்றார். இது எங்கள் 'கடுகு' படக்குழுவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம் என்றார் விஜய்மில்டன்.