‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் இருந்த நெருக்கம் அதிகம் பகிரப்படாத ஒன்று. கமல்ஹாசனை நடிகராக்கியதே எம்.ஜி.ஆர்தான் என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை.
களத்தூர் கண்ணம்மா உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கமல்ஹாசனுக்கு வளர்ந்து வாலிபன் ஆனதும் ஹீரோ வாய்ப்புகள் தேடிவரவில்லை. மேலும் கமலுக்கு நடிகராகும் எண்ணம் இல்லை. நடன இயக்குனர், சினிமா இயக்குனர், கேமரா மேன் இந்த மூன்றில் ஒன்றாக வேண்டும் என்றுதான் விரும்பினார். தங்கப்பன் மாஸ்டரிடம் வேலைக்குச் சேர்ந்து அவர் பணியாற்றும் படங்களி குரூப் டான்சராக ஆடிவந்தார்.
இந்த நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரை சந்தித்தார். "என்ன கமல் இப்போ என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க" என்று எம்.ஜி.ஆர் கேட்டார். தங்கப்பன் மாஸ்டரிடம் வேலை செய்கிறேன். சினிமா இயக்குனராகணும்னு ஆசை கே.பாலச்சந்தர் சார்கிட்ட நீங்க சிபாரிசு பண்ணினா உதவி இயக்குனரா சேர்த்துக்குவார் என்று சொன்னார். இதைக் கேட்டு எம்.ஜி.ஆர் அதிர்ச்சி அடைந்தார். "கமல் நீ பெரிய நடிகனா வருவேன்னு நினைச்சிட்டிருக்கேன். சின்ன வயசுலேயே தேசிய விருது வாங்கினவன்.
நீ நடிகனாத்தான் வரணும்" என்றார். அதற்கு கமல் சின்ன வயசுல அழகா இருந்தேன் இப்போ அப்படியில்லையே வத்தலும் தொத்தலுமா இருக்கேனே என்னை யார் நடிக்க வைப்பார்கள் என்றார்.
"உன் முகத்துல அழகு இருக்கு கமல். நல்லா சாப்பிட்டு கொஞ்சம் நெஞ்சிலும் கன்னத்திலும் சதை ஏத்து அழகு கூடிடும். நான் வேணா கே.பாலச்சந்தர்கிட்ட பேசுறேன். அவரிடம் சென்று உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்காதே நடிக்க வாய்ப்பு கேளு" என்ற கூறி அனுப்பி வைத்தார். அதன் பிறகுதான் தன் மீதே தனக்கு நம்பிக்கை வந்து கே.பாலச்சந்தரை சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்டார். அப்போது அரங்கேற்றம் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.
அதில் பிரமிளாவின் தம்பி கேரக்டருக்கு சுறுசுறுப்பான ஒரு விடலை பையனை தேடிக் கொண்டிருந்தார் அய்யர்வீட்டு பையனாகவும் இருக்கணும். அப்போதுதான் கமல் அவர் முன் நின்றார். தன் கேரக்டரே முன்னால் நிற்பதை உணர்ந்த கே.பி. கமலை நடிக்க வைத்தார். அதன் பிறகான இருவரின் திரைப்பயணம் அனைவரும் அறிந்தது.