தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இளையராஜா- எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் நீண்ட கால நண்பர்கள். சினிமாத்துறைக்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்களான அவர்கள் இப்போதுவரை வாடா போடா என்றுதான் உரிமையோடு பேசிக்கொள்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட அவர்களின் நட்பில், பாடல் காப்பி ரைட்ஸ் விவகாரம் கீறல் விழ வைத்துள்ளது. இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகு அதுகுறித்து எஸ்.பி.பிதரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை. கடவுள் சித்தம் எதுவோ அது நடக்கட்டும் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறி விட்டார்.
ஆனால் இதையடுத்து விழித்துக்கொண்ட பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் காப்பி ரைட்ஸ் விவகாரத்தினால் தங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்பதால் அதற்கு வரவேற்பு கொடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இனிமேல் சினிமா பாடல்களை டிக்கெட் போட்டு யாரும் கச்சேரி நடத்த முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. இந்த விவகாரம் சூடுபிடித்திருப்பதால் இளையராஜா-எஸ்.பிபி., சலசலப்பு மேலும் வலுவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நேரத்தில், அவர்கள் இருவருமே மிகப்பெரிய கலைஞர்கள். அவர்கள் தொடர்ந்து சினிமா மட்டுமின்றி இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும் என்று அபிமானிகள் சிலர் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில், நடிகர் விஷாலும் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில், நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படயிருக்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் இளையராஜா- எஸ்.பி.பியை மீண்டும் இணைப்போம் என்று தெரிவித்துள்ள விஷால், அந்த முயற்சியில் கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.