பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகத்தில் திரைப்பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே சிறிய தயாரிப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பல சிறிய படங்களின் வெற்றிகளை பாதிக்கிறது. தமிழ்த் திரையுலகத்தில் சில முக்கிய சங்கங்கள் இணைந்து திரைப்பட கூட்டமைப்பு என்ற அமைப்பையும் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் பட வெளியீட்டை அவர்களும் இதுவரை சரிப்படுத்தவில்லை.
நேற்று, ஒரே நாளில் 9 திரைப்படங்கள் வெளிவந்ததால் மீண்டும் படங்களின் வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. நேற்று வெளியான 9 படங்களில் இரண்டே இரண்டு படங்களுக்கு இடையில்தான் போட்டி இருக்கிறது. மற்ற படங்களைப் பார்க்க ரசிகர்கள் வராத நிலையே உள்ளது. 9 படங்களில் நான்கே நான்கு படங்கள்தான் பத்திரிகையாளர் காட்சியாகவும் திரையிடப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களுக்குக் கூடத் திரையிட முடியாத சூழலில்தான் சில படங்கள் வெளியாகின்றன.
நேற்று வெளியான படங்களில் 'கடுகு, எங்கிட்ட மோதாதே' ஆகிய படங்களுக்கிடையே தான் போட்டியே இருக்கிறது. 'கடுகு' படத்தை சூர்யா வாங்கி வெளியிட்டதால் படத்திற்கு தியேட்டர்கள் தாராளமாகக் கிடைத்தது. விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் இப்படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைக்கவில்லை.
ஆனால், 'எங்கிட்ட மோதாதே' படத்திற்கு விமர்சகர்களின் பாராட்டும், தியேட்டர்களில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். 80களில் ரஜினி ரசிகர்களுக்கும், கமல் ரசிகர்களுக்கும் இடையிலான மோதல், கொஞ்சம் அரசியல் என இன்றைய ரசிகர்கள் பார்த்திராத விஷயங்களை இயக்குனர் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார் என படத்திற்குப் பாராட்டுக்கள் குவிகின்றன. ஒரு நாளிலேயே 40 தியேட்டர்களில் படம் கூடுதலாகத் திரையிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளரே அறிவித்துள்ளார். படத்தின் பெயரில் இருப்பதைப் போலவே இப்படத்துடன் மற்ற படங்கள் மோதி வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.