பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னை : 2.0 படத்தை தயாரித்து வரும் லைகா புரடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் ஒரு அங்கமான ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. இதற்கான விழா வருகிற ஏப்., 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சியினர் ரஜினி இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் இலங்கை பயணத்தை ரத்து செய்விட்டதாக ரஜினி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது...
என்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கு அன்பு வணக்கங்கள். லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், தன்னுடைய தாயார் ஞானாம்பிகை பெயரில் இலங்கையில் உள்ள வவுனியாவில் 150 வீடுகளை கட்டியுள்ளார். அவர் கட்டிய வீடுகள் ஏழைகளுக்கு வழங்குவதற்காக அந்த விழாவில் கலந்து கொள்ள என்னையும் அழைத்தார். ஏப்., 9-ம் தேதி நடக்கும் அந்த விழாவில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
என்னுடன் இந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வடக்கு மாநில முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ் விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி மற்றும் ஜஸ்டிஸ் கமிட்டி மெம்பர் கீத் வாஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
மறுநாள் ஏப்., 10-ம் தேதி வவுனியா சென்று வீடுகளை பயணாளிகளிடம் ஒப்படைத்து மரக்கன்றுகளை நடும் திட்டமும், அதன்பிறகு முல்லைத்தீவு கிளிநொச்சி, புதுகுடியிருப்பு போன்ற இடங்களை பார்வையிட்டு மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில் பங்கேற்க சம்மதித்து ஏன்.?
வீர மண்ணை சுவாசிக்க ஆசைப்பட்டேன் : நான் இரண்டு விஷயங்களுக்காக இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தேன். ஒன்று, அந்த வீடுகளை திறந்து வைப்பது, காலம் காலமாய் வாழ்ந்த தங்களின் பூமிக்காக தங்களின் இனத்துக்காக, தங்களின் உரிமைக்காக, தங்களது சுய கவுரவித்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி, மடிந்து தங்களை தாங்களே சுய சமாதியாக்கி கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீர்கள் வாழ்ந்த இடங்களை பார்த்து, அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக என்னுள் இருந்தது. என்னை வாழவைக்கும் தமிழ் மக்களை பார்க்க வேண்டும், மனம் திறந்து பேச வேண்டும் என்று இருந்தேன்.
மீனவர்கள் பிரச்னையை பேச இருந்தேன் : மற்றொரு காரணம், இலங்கை அதிபர் மைத்திரி பாலா சிரிசேனாவை சந்தித்து, ஒரு ஜான் வயிற்றுக்காக உயிரை பணயம் வைத்து வேறு எந்த தொழிலுமே தெரியாததால் கடலில் போய் மீன் பிடிக்கும் என்னுடைய மீனவ சகோதரர்களுடைய உயிரை பறித்து, அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை சிறைபிடித்து வைக்கும் சம்பவங்களை அன்றாட பத்திரிகைகளில் படிக்கும்போது நெஞ்சம் துடிக்கிறது. அதைப்பற்றி என்னளவில் அவருடன் இதற்கு ஒரு சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று ஒரு வேண்டுகோள் வைக்க எண்ணியிருந்தேன்.
ரத்து : இத்தருணத்தில் தொல்.திருமாவளவன் ஊடகங்கள் மூலமாகவும், வைகோ போன் மூலமும், வேல்முருகன் ஆகியோர் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்று அன்புடன் கேட்டு கொண்டுள்ளார்கள். அவர்கள் சொன்ன காரணங்களை முழு மனதாக ஏற்று கொள்ளாவிட்டாலும் அவர்களின் வேண்டுகோளுக்காக நான் இவ்விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன்.
வேண்டுகோள் : அதேசமயம் நான் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், திருமாவளன் சொன்னதை போன்று மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை. இனி வரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து, அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.