ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த இரண்டு வாரங்களாக தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய தீர்வு எட்டப்படாத நிலையில் இவர்களை நேற்று நடிர் சங்கம் சார்பில் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்காகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி மற்றும் அருண் ஜெட்லியை நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் ஆகியோர் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ்... ‛‛விவசாயிகளின் பிரச்னைக்காகத்தான் நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியையும், இன்று அருண் ஜெட்லியையும் சந்தித்தோம். விவசாயிகளின் பிரச்னையை உடனடியாக கருத்தில் கொள்ள வேண்டும். இதை ஒரு மாநில விவசாயிகளின் பிரச்னையாக பார்க்காமல், ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் பிரச்னையாக பார்க்க வேண்டும் என்றார்.
நடிகர் விஷால் பேசுகையில், ‛‛விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தோம், இதை முக்கிய பிரச்னையாக கருத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும், இனி விவசாயிகள் தற்கொலை நடக்க கூடாது'' என்றார்.
மத்திய அமைச்சர் உடனான சந்திப்பின் போது விஷால், பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.