ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆணழகன் சிதம்பரத்தின் மகன் அருண் சிதம்பரம் இயக்கி இருந்த படம் கனவு வாரியம். இதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். சர்வதேச ரெமி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற படம் சமீபத்தில்தான் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. மின் தட்டுப்பாட்டை தீர்க்க கிராமத்து இளைஞன் ஒருவன் சிறிய அளவில் காற்றலை மின்சாரம் உற்பத்தி செய்து தன் கிராமத்தின் மின் தேவையை பூர்த்தி செய்கிற மாதிரியான கதை. தற்போது இந்த கதை என்னுடையது என்று உளுந்தூர் பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நான் எலெக்ட்ரீஷியன் டிப்ளமோ படித்துள்ளேன். கடந்த 2012ம் ஆண்டு கடும் மின்தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஹோம் மின்மில் என்ற காற்றாலை மூலம் 160 டி.சி.மின்சாரம் தயாரித்தேன். அப்போது பத்திரிக்கைகள் இதனை செய்தியாக வெளியிட்டது. அதை பார்த்து விட்டு சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அருண் சிதம்பரம் என் வீட்டிற்கு வந்து என்னை சந்தித்தார். எனது கண்டுபிடிப்பை வைத்து கனவு வாரியம் என்ற படம் தயாரித்து இயக்கப்போவதாக கூறினார். அப்போது எனது கண்டுபிடிப்பு பார்முலாவை வாங்கிக் கொண்டார். படம் வெளிவருதற்கு முன்பு எனக்கு 10 லட்சம் தருவதாக கூறினார்.
ஆனால் தற்போது எனது பெயரை படத்தின் நன்றி கார்டில் போட்டுவிட்டதாக கூறி பேசிய படி 10 லட்சம் பணத்தை தராமல் நம்பிக்கை மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு தரவேண்டிய 10 லட்சம் பணத்தை வாங்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் சுரேஷ் கூறியுள்ளார்.