இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி பீடத்தில் அமர்ந்து சாதனை செய்ததால், வளர்ந்து வரும் இளைய தலைமுறை நடிகர்கள் பலருக்கு எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பலர் அரசியல்களத்தில் நின்று கொண்டிருக்க, ரஜினியும் அரசியல் களத்தில் இறங்குவார் என்று நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், தற்போதுவரை அவர் பிடிகொடுக்காமலேயே இருந்து வருகிறார். அதனால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கை தற்போது குறைந்து வருகிறது.
இந்தநிலையில், இளையதலைமுறை நடிகரான விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் கடந்த சில ஆண்டுகளாகவே தென்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் அவர் பொதுமக்களுக்கு உதவிகள் செய்து வருவதால் அது எதிர்கால அரசியலுக்கு அச்சாரம் போடுவதாகவே தெரிகிறது.
ஆனால் இதுகுறித்து விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறுகையில், பத்து வருடங்களுக்கு முன்பே விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர நினைத்தேன். ஆனால் இப்போது அரசியல் வியாபாரமாகி விட்டது. இந்த வியாபார அரசியலுக்குள் விஜய்யை கொண்டு வர வேண்டாம் என்று இப்போது முடிவு செய்திருக்கிறேன். விஜய் அரசியலுக்கு வரமாட்டார். விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபடது. மக்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாரையும் ஆதரிக்கவில்லை. என்கிறார்.