தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிக்கப் நடிகர், பிரியாணி நடிகர் என்று கோலிவுட்டில் பல அடைமொழிகளுடன் உலா வந்து கொண்டிருப்பவர் ஆர்யா. தான் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றாலோ அல்லது விழாக்களுக்கு சென்றாலோ அங்கு எத்தனை நடிகர்கள், இயக்கு னர்கள் வந்திருந்தாலும் அவர்களை கண்டுகொள்ளாமல், நடிகைகள் இருக்கும் ஏரியாவுக்கு சென்று கடலை போட்டுக்கொண்டிருப்பது ஆர்யாவின் வாடிக்கை. இப்படி அவர் நடிகைகளுடன் அதிகமாக நட்பு வளர்த்து வருவதினால்தான், தாங்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்களுக்குகூட செல்லாத நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகள் ஆர்யா தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்தனர்.
மேலும், சினிமா நடிகைகள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்களிடமும் தற்போது நட்பு வளர்த்து வருகிறார் ஆர்யா. அந்த வகையில், சில தொகுப்பாளினிகளை நேரில் கண்டால் அவர்கள் டிவியில் தொகுத்து வழங்குவதை சொல்லி கலாய்க்கும் ஆர்யா, தற்போது திவ்யதர்ஷினியை அவர் புதிதாக வழங்கவிருக் கும் நிகழ்ச்சியை முன்வைத்து கலாய்த்துள்ளார். அதாவது, ஏப்ரல் 14-ந்தேதி டிடி விஜய் டிவியில் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இதை அன்புடன் ஆர்யா -என்ற பெயரில் நான் நடத்துகிறேன் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் ஆர்யா. இதற்கு டிடி இதுவரை எந்த பதிலும் சொல்ல வில்லை. ஆனால் இரண்டொரு நாளில் கண்டிப்பாக ஆர்யாவுக்கு பதில் கொடுப் பார் என்று எதிர்பார்க்கலாம்.