'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அவ்வப்போது ஏதேனும் கருத்துக்களை டுவிட் செய்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டு வருபவர் பாடகி சின்மயி. பாடகி சுசித்ராவும் இவரை சர்ச்சையில் சிக்க வைத்தார். இந்த நேரத்தில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்பவர்கள் மீன்களை கொல்கிறார்கள். அதனால் அவர்களை கொல்வதில் எந்த தவறும் இல்லை என்று சின்மயி சொன்னதாக ஒரு சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், அப்படி நான் சொன்னதே இல்லை. யாரோ என்னை பிரச்சினையில் சிக்க வைக்க எனது பெயரில் பதிவு செய்து இப்படி கோர்த்து விட்டுள்ளனர் என்று மறுப்பு தெரிவித்துள்ளார் சின்மயி. மேலும் நான் ஏதேனும் கருத்துக்களை பதிவிட்டால் அதற்கு தங்களது கருத்துக்களை பதிவிடுவதை விட்டு விட்டு, உன்னை ரேப் பண்ணி விடுவேன் என்றெல்லாம் சிலர் பதிவிடுகிறார்கள். இது எனக்கு பெரிய மனவேதனையை கொடுக்கிறது என்று ஒரு நேரலை வீடியோவில் தெரிவித்துள்ளார் சின்மயி.