Advertisement

சிறப்புச்செய்திகள்

‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவசாயிகளின் அழுகுரல் மத்திய அரசுக்கு கேட்காதது ஏன்? - பிரகாஷ்ராஜ்

24 மார், 2017 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-supports-Farmers-protest

தமிழகத்தில் விவசாயிகள் தொடர்ந்து 11வது நாளாக டில்லியில் உள்ள ஜந்தர் - மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வறட்சி நிவாரண நிதி, விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சையேந்தும் போராட்டம், தூக்கு மாட்டிக்கொள்ளும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம், கோவணம் கட்டி போராட்டம்.... என போராடி வருகிறார்கள். ஆனால் இவர்களின் கோரிக்கைகள் தீர்ந்தபாடில்லை.


இந்நிலையில், விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலகினர் ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கைகளை என்னவென்று கேட்டறிந்தனர். போராட்ட களத்தில் விவசாயிகளின் நிலையை பார்த்து கண் கலங்கினார் பிரகாஷ்ராஜ்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ், மழை இல்லாததால் விவசாயம் நலிவடைந்து வருகிறது. விவசாயின் மகன் விவசாயியாக மாற வேண்டும் என்று எண்ணியது கிடையாது. 11 நாட்களாக போராடி வரும் விவசாயிகளின் அழுகுரல் மத்திய அரசுக்கு கேட்காதது ஏன். இந்தாண்டு கடன்களை ரத்து செய்துவிட்டால், அடுத்த ஆண்டு வறட்சி, வெள்ளம் ஏற்படும் போது பாதிக்கும் விவசாயிகளுக்கு என்ன செய்வது. எனவே இந்த விஷயத்தில் நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


விஷால் பேசுகையில், 11 நாட்களாக போராடி வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் கவலைஅளிக்கிறது. அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க முன் வராதது வேதனை அளிப்பதாக உள்ளது. வாங்கிய கடனுக்காக சிலர் தாலியை கூட விற்றதாக சொன்னார்கள். ஒரு பத்து பேரின் கடன் என்றால் நடிகர் சங்கமே அடைத்து விடலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக கோடி கணக்கான கடன்களை அடைக்க வேண்டும் என்றால் அது மத்திய அரசால் மட்டுமே முடியும். இங்கே போராடுபவர்கள் அனைவரும் முதியவர்கள், அவர்களால் கஷ்டங்களை தாங்கிக்கொள்ள முடியாது, அதை பார்க்கவும் முடியவில்லை. இவ்வளவு நாளாக போராடியும் இவர்களின் கோரிக்கையை அரசு ஏற்காதது வேதனை அளிக்கிறது. இவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் முன்வர வேண்டும் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in