தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றும் பார்லிமென்ட் அவைகளுக்கு வெளியே நேற்று முன்தினம் ஐ.எஸ்.ஐ., என்கிற அமைப்பு நடத்திய தாக்குதல் உலகெங்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான்கு பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து மலையாள நடிகர் அனூப் மேனன் என்பவர் அதிர்ஷ்டவசமாக தப்பிய விபரம் இப்போது வெளியாகி உள்ளது.
மலையாள திரையுலகில் பிரபல நடிகர் தான் அனூப் மேனன். ஹீரோவாக மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் ஒரு கதாசிரியரும் கூட. கடந்த வருடத்தில் பிருத்விராஜின் 'பாவாட', மோகன்லாலுடன் 'கனல்' மற்றும் இந்த வருடம் வெளியான 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' ஆகிய முக்கிய படங்களில் நடித்துள்ளார் அனூப் மேனன்.
இவர் லண்டனுக்கு சில நாட்களுக்கு முன்புதான் சுற்றுலா கிளம்பி சென்றாராம். புதன்கிழமை அன்று சம்பவம் நடப்பதற்கு கால்மணி நேரம் முன்பு தான் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் பகுதியை சுற்றிப்பார்த்துவிட்டு சென்றாராம். அந்தப்பகுதியை விட்டு நான்கைந்து கி.மீ கூட போயிருக்காத நிலையில் தான், திடீரென போலீஸ் வாகனங்களும், தீயணைப்பு வாகனங்களும் எதிர் திசையில் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் நோக்கி விரைவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க, அப்போதுதான் இந்த தாக்குதல் சம்பவம் தெரியவந்ததாம். தான் மயிரிழையில் தப்பியதை நினைத்து அவருக்கு அதிர்ச்சி விலகவே சில நிமிடங்கள் பிடித்ததாம்.