இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
திரைப்பட எடிட்டர்களும் இயக்குனர் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக பிரபல எடிட்டர் ஆண்டனி, சத்யராஜ் நடித்த ஒரு நாள் இரவு படத்தை இயக்கினார். தற்போது இன்னொரு எடிட்டரான டான் போஸ்கோ இயக்குனராகி இருக்கிறார்.
சுந்தரபாண்டியன்' படம் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல்', 'தரணி', 'நையப்புடை' உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். விஷ்ணு விஷால் நடிக்கும் 'அழகுக்கு நீ அறிவுக்கு நான்', 'உத்தரவு மஹாராஜா', உள்ளிட்ட பல படங்கள் வெளியாக தயாராக இருக்கும் நிலையில், தற்போது இவர் புதிய படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
இயக்குனராவது குறித்து டான் போஸ்கோ கூறியதாவது: நான் முதலில் 'உதவி' என்ற குறும்படத்தை இயக்கினேன். அதுதான் எனக்கு சிறந்த புத்துணர்ச்சியை கொடுத்தது. யாரிடமும் உதவி எடிட்டராக பணியாற்றாமல் எடிட்டிங் கற்றுக் கொண்டு சினிமா உலகில் அடியெடுத்து வைத்தேன். எனக்கு எடிட்டர் என்ற அடையாளம் கொடுத்தது 'சுந்தரபாண்டியன்' படம். முதல் படமே பெயர் சொல்லும் அளவிற்கு அமைந்தது சந்தோஷம். பல படங்களுக்கு எடிட்டிங் செய்து வந்ததால் படம் இயக்க முடியவில்லை. அதுபோல், யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல், தற்போது முழுவீச்சில் படம் இயக்கும் எண்ணத்தில் களம் இறங்கி இருக்கிறேன். விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பையும் வெளியிடுவேன். என்றார் டான்போஸ்கோ.