மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படப்பிடிப்பிற்கு சமமாக தனது குடும்பதினருக்கும் நேரம் ஒதுக்குபவர். ஒவ்வொரு படத்தை முடித்த பின்னரும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓய்வெடுக்க வெளிநாடு செல்வதையும் மகேஷ் பாபு வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு இரவு பகலாக படப்பிடிப்புகளில் பங்கேற்று வருவதால் தனது மகனையும் செல்ல மகளையும் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சந்திக்கவில்லையாம். இதனால் சென்னையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த மகேஷ் பாபுவைச் சந்திக்க குழந்தைகள் கௌதம் கிருஷ்ணா, சித்தாராவுடன் அவரது மனைவி நம்ரதா சென்னைக்கு விஜயம் செய்துள்ளனர். சென்னைக்கு கிளம்புவதற்கு முன்னால் தனது குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள நம்ரதா தந்தையைக் காண ஆர்வமுடன் காத்திருக்கும் குழந்தைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.