பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள பாகுபலி-2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. பாகுபலி படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பாகுபலி-2 படத்திற்கும் இசையமைத்துள்ளார். மார்ச் 26ல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ள பாகுபலி-2 பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு பிரம்மாண்டமாக இயக்குனர் ராஜமௌலி ஏற்பாடுகள் செய்து வருகின்றார்.
ஏராளமான ரசிகர்கள் பங்கேற்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடிகைள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பாகுபலி-2 பாடல்கள் வெளியீட்டில் கலந்து கொள்வார் என தகவல் வெளிவந்துள்ளது.
இயக்குனர் ராஜமௌலியின் நெருங்கிய நண்பரான கரண் ஜோஹர், பாகுபலி படத்தின் ஹிந்தி வி நியோக உரிமையை வாங்கியவர். ஹிந்தியில் பாகுபலி படம் வெற்றி அடைய கரண் ஜோஹரும் ஒரு வகையில் காரணம் எனலாம். இதனால் அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில் கரண் ஜோஹரை முன்னிலைப்படுத்த ராஜமௌலி திட்டமிட்டுள்ளாராம். பாகுபலி-2 படத்தின் பாடல்கள் உரிமத்தை லஹாரி ஆடியோ நிறுவனம் ரூ 4.5 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது.