மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
மலேசிய அரசுக்கு உட்பட்ட மலாக்கா நகரம் மிகப்பெரிய சுற்றுலாத்தளம். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மலாக்காவுக்கு சுற்றுலா செல்கிறார்கள். மலேசிய அரசின் சுற்றுலாத்துறை, இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபலத்தை மலாக்கா தூதராக அறிவித்து அவர் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும். அதன்படி கடந்த 2008ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாருக்கானை தூதராக நியமித்தது. ஆனால் ஷாருக்கான் இந்த பணியில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் இன்னொரு பிரபலத்தை தூதராக நியமிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. மலேசிய அரசின் கவனத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கபாலி படப்பிடிப்பின் பெரும்பகுதி மலேசியாவில் நடந்தது. சுமார் 2 மாதங்கள் ரஜினி மலேசியாவில் தங்கியிருந்தார். மலேசிய மக்கள் அவர் மீது தீவிர அன்பை காட்டினார்கள். இவற்றை கருத்தில் கொண்டு மலேசிய அரசு, ரஜினியை தூதராக்க முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக மலேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் விரைவில் ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ரஜினி தூதராக நியமிக்கப்பட்டால் அவருக்கு டத்தோ பட்டமும் வழங்கப்படும் என தெரிகிறது.