டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீப வருடங்களில் நாளிதழ்களில் வரும் செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தால், பள்ளி மாணவ, மாணவியர்களில் பலர் மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்துகொண்ட, தற்கொலைக்கு முயன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வது தொடர்கதையாகி வருவதை உணரமுடியும். சமீபத்தில் வெளியான ஆன் மரியா களிப்பிலானு படத்தில் ஒரு பி.டி மாஸ்டரின் அராஜகத்தை சகிக்க முடியாத நான்காம் வகுப்பு மாணவி, அவரை அடிக்க வேண்டும் என்பதற்காக கூலிக்கு ஆள் தேடி அலைவாள். இதுதான் படத்தின் மொத்தக்கதையும்... அந்த அளவுக்கு இப்போதைய காலகட்டங்களில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மீதான வெறுப்பு குழந்தைகளிடத்தில் அதிகரித்து வருகிறது..
இந்தநிலை சமீபகாலமாக கேரளத்தில் அதிகரித்து வருகிறது. இதனை உணர்ந்த மோகன்லால், வழக்கம்போல தனது பிளாக்கில் இதுகுறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இதுபோன்ற செயல்கள் நடப்பது எங்கோ வெளிநாடுகளில் அல்ல, நம் அருகிலேயே தான்.. அன்றைய காலங்களில் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டித்தனர். ஆனால் இப்போது நிகழ்வது போன்ற தற்கொலை நிகழ்வுகள் அப்போது இல்லையே...ஏன்..? அப்போது உடல்ரீதியாக, மன ரீதியாக என ஆசிரியர்கள் டார்ச்சர் செய்ததில்லை. ஆனால் இன்று இருட்டு அறையில் குழந்தைகளை பூட்டி அடித்து உதைக்கும் அராஜக போக்கு கற்றுக்கொடுப்பவர்களிடம் அதிகரித்து வருகிறது.
அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கும், அதேவிதமாக தனது பிள்ளைகளுக்கு மன அழுத்தம் கொடுக்கும் பெற்றோர்களுக்கும் நான் அறிவுரை சொல்லப்போவதில்லை.. ஏனென்றால் அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் அல்ல. இதற்கான ஒரே தீர்வு இப்படிப்பட்ட நபர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், உங்களுக்கு எதிராக மோசமான நடவடிக்கைகளில் இறங்குபவர்களை தைரியமாக உங்களது விரல்கள் சுட்டிக்காட்ட வேண்டும் இல்லாவிட்டால் அதுவரை அவர்கள் தங்கள் செயலை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். எந்த காரணத்தை கொண்டும் தற்கொலை எண்ணம் மனதில் தோன்றவிடவே கூடாது. பிரச்சனைகளுக்கு அது ஒரு சரியான தீர்வே அல்ல. உங்களுடைய வலியும் மன அழுத்தமும் எனக்கும் புரிகிறது. ஆனால் இதை துணிச்சலாக நீங்கள் கடந்து வர வேண்டும். பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது” என மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை அவர்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டியதன் அவசியத்தை விரிவாக எழுதியுள்ளார் மோகன்லால்..