'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் 30 வயதில் உள்ள நடிகர்களில் போட்டியாளர்களாகக் கருதப்படுபவர்கள் சிம்புவும், தனுஷும் தான். அஜித், விஜய்க்குப் பிறகு இவர்களுக்கிடையேதான் போட்டி என்ற ஒரு நிலை இருந்தது. ஆனால், அதன் பின் அது அப்படியே மாறிவிட்டது. இருந்தாலும் சிம்பு, தனுஷ் இருவருக்கும் இருக்கும் திறமைகள் மற்ற ஹீரோக்களிடம் இருப்பதை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. குறைந்த வயதிலேயே இருவரும் இயக்குனர்களாகவும் மாறியவர்கள்.
தனுஷ் இயக்குனராக அறிமுகமாக உள்ள 'ப.பாண்டி' படத்தில் ராஜ்கிரண் தாத்தா கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். சிம்பு தற்போது நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் அஷ்வின் தாத்தா என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக, இந்த இரண்டு படங்களிலும் தாத்தா கதாபாத்திரம் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே அமைந்துள்ளது.
'ப.பாண்டி' படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் எப்போது திரைக்கு வரும் என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த இரண்டு படங்களிலும் உள்ள தாத்தாக்களில் 'பாண்டி தாத்தா' பெயர் வாங்கப் போகிறாரா அல்லது 'அஷ்வின் தாத்தா' பெயர் வாங்கப் போகிறாரா என்பதுதான் கேள்வியே.