இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ராஜமௌலி அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். ஏப்ரலில் திரைக்கு வரவிருக்கும் பாகுபலி-2 படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் எனும் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாகுபலி-2 படத்திற்கு பின்னர் ராஜமௌலி இயக்கும் படத்தில் டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிப்பில் தனது அடுத்த படத்தை இயக்க ராஜமௌலி ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த வகையில் தனய்யா தயாரிப்பில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்க அல்லு அர்ஜூனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. இப்படத்தை ராஜமௌலி இயக்குவதாகவும் கூறப்படுகின்றது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அல்லு அர்ஜூன் தற்போது இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் டீஜே எனும் படத்தில் நடித்து வருகின்றார்.