ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்நிலையில், இந்தவாரமும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வருவதற்கு தயாராக உள்ளன. இப்போதெல்லாம் வாரத்துக்கு நான்கைந்து படங்களாவது வெளியாகி கொண்டிருக்கின்றன. இவற்றில் எத்தனை படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்று அப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு போட்ட முதலீடு திரும்ப கிடைக்கிறது என்று பார்த்தால்.... உதட்டைத்தான் பிதுக்க வேண்டும்.
இந்த வாரம் 14 திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருந்த நிலையில் விழித்திரு, ஒரு கனவு போல, ஆக்கம்' ஆகிய படங்கள் இந்த வார ரிலீசிலிருந்து பின் வாங்கிவிட்டன. இந்த மூன்று படங்கள் தவிர்த்து விஜய் மில்டன் இயக்கத்தில் பரத், இயக்குநர் ராஜகுமாரன் நடித்துள்ள 'கடுகு', ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் ஆர்.கே.நடித்து, தயாரித்துள்ள 'வைகை எக்ஸ்பிரஸ்', 'நட்டி' நட்ராஜ் நடித்து ராமு செல்லப்பா இயக்கியுள்ள 'எங்கிட்ட மோதாதே', ஆடம் தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பாம்பு சட்டை', சுரேஷ் குமார் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள 'இவன் யாரென்று தெரிகிறதா', ராகுல் இயக்கியுள்ள '1.ஏ.எம்', குமார் மாறன் இயக்கியுள்ள 'அரசகுலம்', சாய் சத்யம் இயக்கியுள்ள '465', கண்ணன் ரங்கசாமி இயக்கியுள்ள 'தாயம்', சதீஷ் ஆர்.வி. இயக்கியுள்ள 'ஜூலியும் நாலு பேரும்', சாம்ராஜ் இயக்கியுள்ள 'சாந்தன்' ஆகிய படங்கள் உறுதியாக ரிலீஸாக உள்ளதாக தகவல் அடிபடுகிறது!
இத்தனை படங்களும் வெளியானால் ஒவ்வொரு படத்துக்கும் 50 தியேட்டர்கள் கூட கிடைக்காது. எனவே நிச்சயமாக இந்தப்பட்டியலில் உள்ள படங்களில் பாதி எண்ணிக்கையாவது குறையும் என்பதே தற்போதைய நிலவரம்.
இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால் ரிலீஸ் பந்தயத்தில் இருந்து எத்தனை படங்கள் பின் வாங்கும் என்பது சில நாட்களில் தெரிந்து விடும்! எனினும் வாரத்துக்கு இத்தனை படங்கள் வெளியாவது படத்துறைக்கு மட்டுமல்ல மக்களின் பர்ஸுக்கும் நல்லதல்ல.