சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
ஒரு சில படங்களில் ஹீரோவாக தலைகாட்டிவிட்டு அந்தப் படங்கள் தோல்வியடைந்ததால் புதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருக்கும் இளம் ஹீரோக்கள் பலர்.அவர்களில் ஒருவர் அசோக் செல்வன்.இவர் நடித்த படங்கள் சரியாக ஓடாததினால் இன்னும் போராட்டமாகவே இருக்கிறது இவருடைய திரையுல வாழ்க்கை.இவர் நடித்துள்ள 'சில சமயங்களில்', 'கூட்டத்தில் ஒருத்தன்' ஆகிய இரண்டு படங்கள் முடிவடைந்தநிலையில் விரைவில் ரிலீசாகவிருக்கின்றன.
இந்தப் படங்கள் வெற்றியடைந்தால் மட்டுமே அசோக் செல்வன் இங்கே தாக்குப்பிடிக்க முடியும். இல்லை என்றால் தோல்விப்பட ஹீரோ என்ற முத்திரை குத்தப்பட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.இந்நிலையில் இதுவரை தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்து வந்த அசோக் செல்வன் அடுத்து ஒரு தெலுங்குப் படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார்.
பரத் வர்மா என்பவர் அசோக் செல்வனை தெலுங்கில் அறிமுகப்படுத்த இருக்கிறார்.அவர் அண்மையில் அசோக்செல்வனை சந்தித்து ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார், அந்த கதை அசோக் செல்வனுக்கு பிடித்ததால் நடிக்க சம்மதித்திருக்கிறார்.இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.