'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதுமுகங்களின் நடிப்பில் உருவாகி உள்ள படம் உயிர்க்கொடி. ஜெயக்கொடி பிலிம்ஸ் சார்பில் அமல்ராஜ் என்பவர் தயாரித்துள்ளார், பி.ஆர்.ரவி என்பவர் இயக்கி உள்ளார். இந்தப் படம் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை பற்றி பேசுகிறது. கர்நாடகத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞனும் தப்பிக்க முடியாது ஒரு குழிக்கும் மாட்டிக் கொள்கிறார்கள். குடிக்க தண்ணீர் இன்றி மரணத்தை நோக்கி அவர்கள் செல்லும்போது இரு மாநில தண்ணீர் பிரச்சினை பற்றி வாதிடுகிறார்கள். இரு தரப்பு நியாயத்தையும் எடுத்து வைக்கிறார்கள். அவர்கள் தப்பித்த பிறகு என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை.
இந்தப் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்குவதாக கூறியது. துளியும் ஆபாசம், வன்முறை இல்லாத படத்துக்கு எதற்கு யுஏ என்று இயக்குனரும், தயாரிப்பாளரும் வாதிட்டார்கள். படம் விவசாயம் பற்றியும், இரு மாநில பிரச்சினை பற்றியும் பேசுகிறது. அது குழந்தைகளுக்கு புரியாது என்று தணிக்கை குழு அதிகாரி தெரிவித்தாராம். இதனால் தயாரிப்பாளர் மறு தணிக்கையில் யு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். மறு தணிக்கையில் படத்திற்கு யு சான்றிதழ் தரலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் தணிக்கை அதிகாரி சான்றிதழ் தராமல் 25 நாட்கள் இழுத்தடித்துள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் அமல்ராஜ் தயாரிப்பாளர் சங்கத்திலும் தணிக்கை குழு உறுப்பினரான எஸ்.வி.சேகரிடமும் புகார் அளித்தார்.
அதன் பேரில் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் நேற்று தணிக்கை குழு அவலகத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆனாலும் இந்த விஷயத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. "பெரிய பட்ஜெட் படங்களில் எவ்வளவு வன்முறை ஆபாசம் இருந்தாலும் யு சான்றிதழ் கொடுக்கிறார்கள். சிறு பட்ஜெட் படங்களுக்கு பெரும் தொல்லை கொடுக்கிறார்கள்" என்ற அவர்கள் தணிக்கை குழு மீது குற்றம் சாட்டினர்.