பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கேரளாவைச் சேர்ந்த பிரபல நாட்டிய கலைஞர் பிரயகா. தமிழில் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. மலையாளப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது அவர் குஞ்சு முகமூது இயக்கும் விஸ்வாஸ்பூரம் மன்சூர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரோஷன் மேத்யூ நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கொச்சி அருகே நடந்த வருகிறது. நேற்று நடந்த படப்பிடிப்பில் பிரயகாவை மேக்அப் மேன் தாக்கியுள்ளார். இதுகுறித்து பிரயாக மலையாள நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:
விஸ்வாஸ்பூர்வம் என்ற படத்தில் நான் மும்தாஜ் என்ற முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறேன். படப்பிடிப்பு அதிகாலை 4 மணிக்கு மக்கள் கூடும் பொது இடத்தில் நடந்தது. எனக்கென்று தனி மேக்அப் மேன் கிடையாது. கம்பெனி மேக்அப் மேன்தான் மேக்அப் போட போடவேண்டும். அன்று மேக்அப் மேன் தாமதமாக வந்தார். அதுகுறித்து அவரிடம் நான் எதுவும் கேட்கவில்லை.ஷாட்டுக்கு நேரமாகிவிட்டது சீக்கிரம் முடியுங்கள் என்று மட்டும்தான் சொன்னேன். பொது இடத்தில்தான் மேக்அப் போட்டார். பொது இடம் என்றும் பார்க்காமல் முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பி வழக்கத்துக்கு மாறாக கடினமாக நடந்து கொண்டார். இது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. இது பற்றி படப்பிடிப்பு முடிந்ததும் அம்மாவிடம் சொன்னேன்.
அம்மா அவரிடம் தட்டிக் கேட்டார். நானும் பேசினேன். நான் கை நீட்டி பேசியது பிடிக்காமல் என் கையை தட்டிவிட்டு தாக்கினார். அம்மாவையும் ஆபாச வார்த்தைகளால் பேசினார். இதுகுறித்து நான் நடிகர் சங்கதில் புகார் அளித்துள்ளேன். நடிகர் சங்கம் போலீசில் புகார் அளிக்கச் சொன்னால் புகார் செய்வேன். என்கிறார் பிரயகா.