டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இசை அமைப்பாளர் இளையராஜா தான் இசை அமைத்த பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட எந்த பாடகரும் மேடையில் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது பாடகர் பாடகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளையராஜாவின் இந்த முடிவு பின்னணி பாடர்களின் எதிர்காலத்தை இருளாக்கி விடும் என்று பிரபல பின்னணி பாடகி சுனிதா அச்சம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இளையாராஜா மகத்தான இசைக் கலைஞர். அவரை தவிர்த்து விட்டு தமிழ் திரையிசை வரலாற்றை எழுத முடியாது. அவர் பாடல்கள் இல்லாமல் இசை நிகழ்ச்சிகள் நடத்தவே முடியாது. இப்போது அவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மட்டும்தான் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நாளை எல்லா பாடகர்களுக்கும் நோட்டீஸ் வரலாம். இளையராஜாவை பின்பற்றி மற்ற இசை அமைப்பாளார்களும் எங்கள் பாடலை பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பினால் பின்னணி பாடகர்களின் எதிர்காகலம் இருளடைந்து விடும். இதுகுறித்து இளையராஜா தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என்கிறார் சுனிதா.