தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காமெடி நடிகர் கவுண்டமணிக்கு பேட்டி படங்கள் என்றாலே அலர்ஜி. எந்த பத்திரிக்கைக்கும் பேட்டி தரமாட்டார் கேட்டால் "நான் என்ன காந்தியா? காமராஜரா?" என்று கேட்பார். படம் எடுத்தாலும் சம்மதிக்க மாட்டார். "கமல்ஹாசன் மாதிரி அழகா இருக்கிறவங்கள படம் எடுத்து பத்திரிகையில போடுங்கப்பா என்னை படம்புடிச்சு போட்டா சின்ன புள்ளைங்க பயந்துடப்போவுது" என்பார்.
தற்போது செல்பி படங்கள் வந்து விட்டது. அது சுத்தமாக கவுண்டமணிக்கு பிடிக்காது. "அதென்னப்பா அவுங்களே அவுங்கள படம் புடிக்கிறது... நாட்டுல வேற யாருமே இல்லியா... அம்புட்டு பேரும் செத்தா போயிட்டாங்க..." என்பார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பேரனுடன் கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தார் கவுண்டமணி. அப்போது ஒரு ரசிகர் ஒருவர் கவுண்டமணி பற்றித் தெரியாமல் அவர் அருகில் சென்று "அண்ணே நான் உங்க ரசிகர் உங்களோடு ஒரு செல்பி எடுத்துக்கட்டுமா?" என்று கேட்டிருக்கிறார். "செல்பின்னா உன்னைய நீயே எடுக்குறதுதானே அதோ அங்க பாரு யாருமே இல்லை அங்க போயி தனியாக எடுத்துக்கோ" என்று சொல்லியிருக்கிறார் ரசிகரும் விடுவதாக இல்லை. தூரத்தில் நின்று கவுண்டமணி தெரியும்படி ஒரு செல்பி எடுத்து அதை தனது பேஸ்புக்கில் போட்டிருக்கிறார்.