தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவுக்கு த்ரிஷா, வித்யாபாலன், ப்ரியா மணி, பத்மப்ரியா உள்ளிட்ட பல அழகிகளை தந்த பாலக்காட்டிலிருந்து புறப்பட்டு வந்தவர் சுபிக்ஷா. சினிமா கனவுடன் வந்தவர் சென்னையிலேயே தங்கியிருந்து வாய்ப்பு தேடினார். பெரும் தேடலுக்கு பிறகு பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கார்த்திகா ஹீரோயின். இரண்டாது ஹீரோயின் சுபிக்ஷா என்றார்கள். இரண்டாவது ஹீரோயினாக இருந்தாலும் பரவாயில்லை பாரதிராஜா படமாச்சே என்று நடித்தார். 20 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆனால் படத்தில் வந்தது இரண்டு காட்சிகள்தான்.
இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த சுபிக்ஷா அதற்காக மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்ச்சி செய்தார். மலையாளப் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்கள் கிடைத்தது. அதிலும் நடித்தார். திரைக்கு வராத கதை என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். அந்த படம் திரைக்கு வந்த வேகத்தில் திரும்பி விட்டது.
இந்த நிலையில்தான் பலாஜி சக்திவேல் இயக்கும் ரா...ரா...ராஜ்குமார் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் மூலமாகத்தான் விஜய் மில்டன் இயக்கும் கடுகு படத்தில் பரத் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து. ராஜ்குமார் முதல் படமாக இருந்தாலும் கடுகுதான் முதலில் வெளிவருகிறது. இதில் அல்ட்ரா மார்டன் பாடி பில்டரான பரத்தை காதலிக்கும் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்திருக்கிறார். இரு பெரும் இயக்குனர்களிடம் நடித்த ராசியில் தற்போது நேத்ரா, ரீங்கார ஓசை படத்தில் நடித்து வருகிறார். என்றாலும் கடுகு படத்தின் முடிவை பொருத்தே சுபிக்ஷாவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் நிலை. கடுகு தனக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சுபிக்ஷா.