அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
எந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக தற்போது ‛2.O படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் இப்படம் இயக்குநர் சங்கரால் இயக்கப்பட்டு வருகிறது. லைக்கா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. 75 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிகேணியில் எந்திரன் -2 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. இன்று காலை படப்பிடிப்பிற்காக சாலையில் நின்றிருந்த வாகனங்களை புகைப்படம் எடுத்த செய்தியாளர்கள் மீது படக்குழுவினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக 2.0 படத்தின் இயக்குநர் சங்கரின் உறவினர் பப்பு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், உதவி இயக்குனர்கள் அலெக்ஸ், சுந்தர்ராஜன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2.0 படக்குழுவைச் சேர்ந்த 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.