பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் கவிஞர் ஜெயங்கொண்டான். இவருக்கு ஆதரவாக அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்தார் நடிகர் கஞ்சா கருப்பு. அப்போது அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்தாராம் கஞ்சா கருப்பு. ஆனால், அந்த தேர்தலில் போட்டியிட்ட ஜெயங்கொண்டான் தோல்வியடைந்துவிட்டார்.
இருப்பினும், தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றப்போவதாக சொல்லும் கஞ்சா கருப்பு, தற்போது சமுத்திரகனியின் தொண்டன் படத்தில் ஆம்புலன்ஸ் கிளீனராக நடித்திருப்பவர், அந்தபடம் வெளியானதும், ஜெயங்கொண்டான் தொகுதியிலுள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுக்கப்போகிறாராம். மேலும், அரசியல்வாதிகள் வேண்டுமானால் வாக்கு தவறலாம், ஆனால் நான் தவறமாட்டேன். வெற்றியோ தோல்வியோ மக்களுக்கு செய்து தருவதாக சொன்னதை செய்துதர வேண்டும் என்று கூறும் கஞ்சா கருப்பு, வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை தயாரித்து நடித்தபோதும், அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக சில ஊர்களுக்கு தனது சொந்த செலவில் போர் போட்டுக் கொடுத்து அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.