ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண், அப்போலோ மருத்துவ குழுமங்களின் தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி உபசேனாவை 2012ல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆனதால் அவ்வப்போது உபசேனா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வரும் மெகா குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவிப்பர். அதே போல் கடந்த சில தினங்களாக உபசேனா கர்ப்பமாக இருப்பதாகவும் ராம் சரண் தந்தையாகப்போவதாகவும் இணையத்தில் செய்தி உலா வந்தது. இது குறித்து ராம் சரணோ, உபசேனாவோ வாய் திறக்காமல் இருந்ததால் உண்மையான தகவலே என்றும் கூறப்பட்டது. ஆனால் மெகா குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். உபசேனா கர்ப்பமாக இருப்பதாக வெளிவரும் தகவல் உண்மையில்லை என்றும் உபசேனா கர்ப்பமாக இருந்தால் அதனை ராம் சரணே முதல் ஆளாய் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.