திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
காப்புரிமை சட்டத்தின் கீழ், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியான நடவடிக்கையே என, பல தரப்பிலும் ஆதரவு பெருகி வருகிறது.தான் இசையமைத்த பாடல்களை, வணிக ரீதியாக பயன்படுத்தக்கூடாது; மீறினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, இளையராஜா, சில தினங்களுக்கு முன், பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு, நோட்டீஸ் அனுப்பினார். அதை, எஸ்.பி.பி., சமூக வலை தளங்களில் வெளியிட்டது, திரை உலகில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வணிக ரீதியாக யாரும் பாடக்கூடாது; மேடை கச்சேரிகளில் பாட எவ்வித தடையும் இல்லை என, இளையராஜா, விளக்கம் அளித்தார். அவரது செயல்பாடு சரியானதே என, பல தரப்பிலும் ஆதரவு பெருகி வருகிறது.
சிக்கல் என்? : இது குறித்து, சினிமா வட்டாரங்கள் கூறியதாவது:இளையராஜா, 2016ல், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அதில், எஸ்.பி.பி., பங்கேற்கவில்லை. 20 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டதாலேயே அவர் இல்லாமல், இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்தியதாக தகவல்கள் பரவின. அதே அமெரிக்காவில், இளையராஜா பாடலை எஸ்.பி.பி., பாடியதாலேயே தற்போது பிரச்னை வெளியே வந்துள்ளது.இப்பிரச்னையை, எஸ்.பி.பி., சமூக வலைதளம் வரை கொண்டு செல்லாமல், சுமுக பேச்சின் மூலம் தீர்வு கண்டிருக்கலாம். வணிக ரீதியாக ஒரு நிகழ்ச்சியை நடத்தும் போது, அதற்கான காப்புரிமை பெற்றவருக்கும் குறிப்பிட்ட தொகை, கொடுப்பதுதான் முறை.
காப்புரிமை : இளையராஜா மட்டுமின்றி ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட இந்தியாவின், டாப் இசை கலைஞர்கள் பலரும், ராயல்டி விஷயத்தில், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளான, ஐ.பி.ஆர்.எஸ்.,- பி.பி.எல்., உள்ளிட்டவற்றின் வழிகாட்டுதல் படியே செயல்படுகின்றனர்.தமிழ் சினிமாவில், காப்புரிமை சட்டம் குறித்து, தற்போதுதான் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. எந்த ஒரு பாடலையும் கேசட், சிடி அல்லது நவீன கால, ஐ.டியூன் போன்றவையால் மட்டுமே விலைக்கு வாங்க வேண்டும். ரேடியோ மற்றும் டிவி சேனல்களில் கேட்கும் போது, அந்தந்த நிறுவனங்கள் அதை விலை கொடுத்து வாங்குகின்றன. இதற்கு, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான, ஐ.பி.ஆர்.எஸ்., - பி.பி.எல்., சிம்கா., இஸ்ரா போன்றவை, இசை கலைஞர்களுக்கு, ராயல்டி உரிமையை பெற்றுத் தர தொடங்கப்பட்ட அமைப்புகள். வட மாநிலங்களில், பாடல் ஆசிரியர்களும் பாடல்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.இனி தமிழ் திரையுலகிலும் தயாரிப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள் காப்புரிமை விஷயத்தில் கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.