டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
40 ஆண்டு காலத்திற்கும் மேலாக இளையராஜாவும், எஸ்பிபியும் அவ்வளவு நட்பாக இருந்தவர்கள், இப்போது ராயல்டி விஷயத்தில் ரெண்டு பட்டு கிடக்கிறார்கள். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் சட்டப்படி இளையராஜா செய்தது சரியே என்று அனைவரின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஞானவேல்ராஜா, இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரச்னை யோசிக்க வைக்கிறது என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி ஞானவேல் ராஜா மேலும் பேசியதாவது: ‛‛12 வாக்குறுதிகளுடன் இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம். அனைத்து தயாரிப்பாளர்களும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரச்னை யோசிக்க வைக்கிறது. இனி, டிவிக்களுக்கு எங்கள் படத்தின் காமெடி, பாடல்களை இலவசமாக தூக்கி கொடுக்காமல், ஏன் காப்புரிமை கேட்கக்கூடாது என்று தோன்றுகிறது, என்றார். இயக்குனர்கள் மிஷ்கின், பாண்டிராஜ், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, பிரபு, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், செல்வா உடனிருந்தனர்.