டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது தலைமையில் நம்ம அணி உருவாக்கப்பட்டு அதில் நடிகர்கள், இயக்குனர்கள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இந்த அணியினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். நேற்று திருச்சி வந்த விஷால் அணியினர் வாக்கு சேகரித்து விட்டு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது விஷால் கூறியதாவது:
தமிழ் சினிமாவின் வலுவான அமைப்பு தயாரிப்பாளர் சங்கம். அது இப்போது வலுவிழந்துள்ளது. அதனை வலுப்படுத்தவே நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இணைந்து நம்ம அணியை உருவாக்கி போட்டியிடுகிறோம். எங்கள் அணிக்கு அதிக ஆதரவு உள்ளது. நாங்கள் தான் வெற்றி பெறுவோம். நாங்கள் வெற்றி பெற்றதும் சங்கத்தின் மேம்பாட்டுக்காக இளையராஜாவையும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையும் இணைத்து இசை நிகழ்ச்சி நடத்துவோம். அதன் மூலம் சங்கத்திற்கு 100 கோடி நிதி திரட்டித் தருவோம்.
நடிகர்கள் தயாரிப்பாளர்களை மிரட்டி அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ஒவ்வொரு நடிகரும் தங்களின் மார்க்கெட்டுக் ஏற்பவே சம்பளம் கேட்கிறார்கள். தயாரிப்பாளர்களும் மார்கெட் அறிந்து சம்பளம் கொடுக்கிறார்கள் என்றார். பேட்டியின்போது இயக்குனர் மிஷ்கின், பாண்டிராஜ், பிரகாஷ்ராஜ் அருகில் இருந்தனர்.