இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரெமோ படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கி வரும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா, பிரகாஷ்ராஜ், மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடித்து வரும் இந்தப்படத்தை சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பரான ஆர்.டி.ராஜா பெரில் தொடங்கிய பேனரில் தயாரித்து வருகிறார்.
சென்னையில் உள்ள பிரசாத் லேபில் போடப்பட்ட செட்டில் 80 சதவிகித படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. விரைவில் வெளிநாட்டில் பாடல் காட்சிகளை படமாக்கவுள்ளார்கள். வேலைக்காரன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இந்தப் படத்தை ஆர்.டி.ராஜாவே தயாரிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்திருப்பதால் இந்தப் படத்தை பெரிய விலைக்கு பிசினஸ் பண்ணலாம் என்று திட்டமிட்டுள்ளாராம் ஆர்.டி.ராஜா. மேலும் சமந்தாவுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டாராம் ஆர்.டி.ராஜா. இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். முழுக்க தென்காசி பகுதியில் நடைபெறுவது போன்று இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் பொன்ராம். சிவகார்த்திகேயன் தற்போது நடிக்க உள்ள படங்களிலேயே சின்ன பட்ஜெட் படம் இதுதானாம்.