'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விதார்த் ஒரு புடம் போடப்பட்ட நடிகன். எந்த படமாக இருந்தாலும் அதை அனுபவிச்சி பண்ணக்கூடிய நடிகர் என்று ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் டிரெய்லர் விழாவில் நடிகர் சங்கத்தலைவர் நாசர் வாழ்த்திப்பேசினார்.
மேலும், எங்கிருந்து அவருடைய நடிப்புக்கான தேடல் ஆரம்பிக்கிறாருன்னு எனக்கு தெரியும். அவர் வெயிட் பண்ணனும். அவர் ஒரு புடம் போடப்பட்ட ஒரு நடிகன் என்று நான் உத்தரவாதம் தருவேன். வெறும் நடிகனாக கனவு காண்பது மட்டுமல்ல, நடிகராக தன்னை தயார்படுத்திக் கொள்வதுதான் ஒரு நடி கனின் முதல் தேடலாக உள்ளது. அந்த தேடல் விதார்த்திடம் உள்ளது.
ஒரு படத்தில் பார்க்கிறேன். ஒரு மூலையில் நிற்கிறான். என்னப்பா என்று கேட்டால், சின்ன வேடம்தான் ஆனா நல்ல வேடம் சார் என்கிறார். நாடக நடிகனுக்கு மட்டும்தான் ஒரு நிகழ்வின் வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்கின்ற பக்குவம் இருக்கும். விதார்த்தின் உழைப்புக்காக இந்த படம் ஓடும். ஆட்டக்கார அலமேலு, அதுதான் ஒருகாலத்தில் மிகப்பெரிய படம். அன்றைக்கு ஆடுதான் பெரிய படமாச்சு. அதேபோல் இந்த ஒரு கிடாயின் கருணை மனு படமும் மனசுக்கு நெருக்கமான படம். அதை விட பெரிய வெற்றியடைய வேண்டும் என்றார் நாசர்.