இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தன் இசையில் உருவான பாடல்களை, உரிய அனுமதியின்றி பாடினால், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என, பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா, நோட்டீஸ் அனுப்பினார். இதனால், இனி, இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட மாட்டேன் என, எஸ்.பி.பி., அறிவித்தார். இந்த விஷயத்தை மேலும் பரபரப்பாக்க வேண்டாம். இறைவன் படைப்பில் அனைவரும் நல்லவர்கள்; சமமானவர்கள் என, குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம், சமூக வலை தளங்களில், கருத்து மோதல்களை ஏற்படுத்தி உள்ளன. ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தன் டுவிட்டர் பக்கத்தில், ‛‛இளையராஜா - எஸ்.பி.பி.,யின் மோதல் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. இதில், விரைவில் சுமுக தீர்வு கிடைக்கும் என, நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.