அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது |
சினிமாவிற்கு துரோகம் செய்தால் சும்மா விடமாட்டேன் என, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் மதுரையில் பேசினார். சென்னையில் ஏப்.,2ல் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் தயாரிப்பாளர் தாணு அணிக்கு எதிராக நம்ம அணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கிய விஷால் மதுரையில் பேசியதாவது...
ஒரு தயாரிப்பாளர் படத்திற்கு பூஜை போட தேங்காய் வாங்கிய நாள் முதல், படத்தை வெளியிடும் நாள் வரை நாங்கள் துணையாக இருப்போம். எங்கள் அணியில் தயாரிப்பாளர்களின் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காண தனித்தனி குழுக்கள் உருவாக்கப்படும். இந்த தேர்தலில் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால், நடிகர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. சினிமாவிற்கு யார் துரோகம் செய்தாலும் சும்மா விடமாட்டேன். அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் நான் இதுபோன்ற பதவிக்கு வரவில்லை. நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிகள் விரைவில் துவங்கும், என்றார்.