பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
எத்தனையோ திறமையிருந்து சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அல்லோலப்படுபவர்கள் ஏராளம். முன்பெல்லாம் பட வாய்ப்பு பெற வேண்டுமானால் ஒவ்வொரு கம்பெனி கம்பெனியாக ஏறி - இறங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை, டிஜிட்டல் யுகம் வந்த பிறகு தங்களது திறமையை வீடியோக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி அதன்மூலம் வாய்ப்பு பெறுகின்றனர். சிலர் குறும்படங்கள் மூலம் பிரபலமாகின்றனர். இருந்தாலும் திறமையிருந்து சோபிக்க முடியாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி உள்ளவர்களுக்கு பிரபல இணையதள டிவியான ‛யப்-டிவி' புதிய மேடை அமைத்து தந்துள்ளது. அதன்பெயர், ‛யப்-டிவி ஒரிஜினல்'.
சினிமா மட்டுமல்லாது, குறும்படங்கள், குறுந்தொடர்கள், சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வழிவகை செய்துள்ளது இந்த இணையதள டிவியான ‛யப்-டிவி'. இந்த ‛யப்-டிவியில் ‛ஒரிஜினல்' என்ற புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குறும்படங்கள், குறுந்தொடர்கள் உள்ளிட்டவைகள் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் இதன் அறிமுக விழா ஐதராபாத்தில் நடந்தது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இதை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது யப் டிவி., நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரியான உதய் ரெட்டி உடன் இருந்தார். இதுகுறித்து மகேஷ் பாபு கூறுகையில், சினிமாவில் திறமையானவர்களுக்கு வாய்பளிக்க இப்படியொரு தளத்தை ஏற்படுத்தி தந்த ‛யப்-டிவி'-யை மனதார பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
முதலாவதாக யுகாதி அன்று ‛எண்டிகுலா' என்ற குறுந்தொடர் ஒளிப்பரப்பாக இருக்கிறது. ஐ-கேண்டி சார்பில் லக்ஷ்மண் கார்யா இத்தொடரை இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, ‛ஏர்லி மார்னிங்' என்ற தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது.