தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கருத்து தெரிவிக்கின்றேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் சர்கார்-3 எனும் படத்தை உருவாக்கியுள்ளார். படப்பிடிப்புகள் நிறைவடைந்து ஏப்ரல் 7 ஆம் தேதி இப்படத்தை திரையிட திட்டமிட்டிருந்த ராம் கோபால் வர்மாவிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு திரைக்கதை அமைத்த எழுத்தாளர் நீலேஷ் கிரிகர் தனது சம்பள பாக்கியை ராம் கோபால் வர்மா இன்னும் செட்டில் செய்யவில்லை என நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்வழக்கின் விசாரணையின் போது ராம் கோபால் வர்மா ரூ6.2 லட்சம் நீதிமன்றத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. அதுவரை இப்படத்தின் சிறப்பு திரையிடலை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், கிரிகர் அவரது வழக்கறிஞருக்கு சர்கார்-3 படத்தை திரையிட்டுக் காட்டவும் பரிந்துரைத்துள்ளது. மேலும் முழு திரைக்கதையின் நகலை கிரிகர் மற்றும் நீதிமன்றத்திடம் ராம் கோபால் வர்மா சமர்பித்தாக வேண்டும். இவ்வழக்கின் தீர்ப்பினை பொருத்தே சர்கார்-3 படத்தின் ரிலீஸ் தேதி அமையும்.